அப்படியே துரத்திவிட்டு
உன் நினைவுகளை
இழுத்து வைத்த
என் படுக்கையை
எடுத்து விரித்து
அதன் மீதே
உட்கார்ந்து
என் இருவிழிகளை
இழுத்து மூடினேன்..
கண் நிறைஞ்ச
காட்சிகளாய்
வான் வெளியில்
பறவைகளின்
வரிசைப் படுத்தலில்
உன் கால் தடங்கள்
இன்னும் என்
கண்களில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
என் நம்பிக்கையில்
நாள் முழுதும்
என் உயிர்
நீதானே......
.
.
06.02.2016
.
.

No comments:
Post a Comment