Saturday, 6 February 2016

நீயே சொல்லு....

கண்களை விரித்துப்
பார்த்தேன்
பகலெல்லாம்
தூங்கியதுபோல்
பிரமை
கண்களை
மூடிக்கொண்டே
நினைவுகளை
தடவிப் பார்க்கிறேன்
யன்னலை மூடி
நீ சொன்னதையெல்லாம்
நான் கேட்கத்
துடித்த பொழுது
தாங்குமா
உன் நெஞ்சம்
தூங்கு என்றாய்
வீடெங்கும்
உன் சுவாசம்
வந்து வந்து
போகிறது
உயிரே
உனக்காகத்தான்
இன்னும்
நானும்
சுவாசிக்கிறேன்....

காற்று என் இதயத்தைக்
கடனாகக்
கேட்கிறது
கொடுக்கவா
இல்லை
தடுக்கவா..
நீயே சொல்லு....

 .
.
06.02.2016                                .

No comments:

Post a Comment