மனசும் மனசும்
ஒட்டுமென்று
என் மனசை எல்லாம்
பேப்பரில் கொட்டி
சோறு பூசிக்
கவரில் ஒட்டி
சொந்தங்கள்
யார் கண்ணும்
என் மீது படாமல்
பெட்டியினுள்
நான் தள்ளிவிட்ட
என் ஆசைக் கடிதம்..
காப்பு வளையல்
கொலுசென்று
கம்பு வித்து
வாங்கி வைத்தேன்
கண்ணாலம்
காட்சியென்று
கைபிடிக்கும்
நேரமதில்
கண்ணூரு படாமல்
பேச்சியம்மனிடம்
வாய் பேசாமல்
வேண்டிக்கிட்டேன்...
சோப்பு சீப்பு
கண்ணாடி
சொண்டு சிவக்க
வாய் பூச்சு
கையோடு வாங்கிவரக்
கண்ணாளா
உன்னிடம்
காசு இருக்கா
தெரியலயே...
உன்னைத் தேடி வரத்
துணிவுமில்லை
என் கடித்ததுக்கு
பதிலுமில்லை
ஊருக்கு வரும்
பஸ் எல்லாம்
ஏறி இறங்கிப்
பார்க்கிறேன்.
என் நினைவில்
இருக்குமந்த
எனக்கான
உன் முகத்தை மட்டும்
இதுவரைக்கும்
காணலையே..
என்னை உனக்கு
நினைவிருக்கா......?
அதுவும் தெரியலயே..?
.
.
23.02.2016
No comments:
Post a Comment