Tuesday, 31 March 2015

யார் செய்த மாயமோ...?


கை நிறையப்
பொய்யை அள்ளிக்
கண் கட்டி 
வித்தை
காட்டிக்
காரியங்கள்
நடத்த
காலங்கள்
ஒத்துவர
சேருமந்த
சில்லறைகள்

பொறுக்கி
எடுத்தவன்
ஒவ்வொன்றாய்
எண்ணப்
பொழுதுகள் போதாமல்
பொய் 
மெய்யில்
தொடரும்
தூரப் பயணத்தில்

தொடுத்த எண்ணத்தில்
அவசரமாய்
கடந்த
பாதையில்
கிடந்த
பழத்தில்
சட்டென்று
சறுக்கி
சரீரம்
சரிந்துவிழத்

தூரமாய்
அவன் கண்ணில்
துல்லியமாய்
தெரிகிறது
கானல் நீர்

யார் செய்த மாயமோ...???

அருள் நிலா வாசன்      

No comments:

Post a Comment