வாசல் தெளித்துக்
கோலம் போட
வாசல் கதவு
திறக்கவேயில்லை....
வேரில் பிடித்த
ஈரம் காய்ந்து
இடையில் தோய்ந்து
இன்னும்
நனைய
அடித்து ஊத்தியது
இருட்டில் வந்த
இடியும் மழையும்.
ஒரே நாளில்
கொழுத்தும்
சூரியனைக்
கொள்ளையடிக்க
அடித்துத் தோய்த்து
இறுக்கிப் பிழிந்த
அத்தனை துணியும்
பாரம் தோய்ந்த
கொடியில்
இன்னும்
ஆடிக் கொண்டே
இருக்கிறது......
வீட்டுச் சாவி
வீதியில் கிடக்க
விடுப்புப் பார்த்தவர்
வில்லங்கம் பிடிக்க
வீணாய் போனது
எல்லாம்....
மொட்டவிழ்ந்த மலரின்
வாசம்
மாலையில் சேராமல்
மலர்ந்தும்
மலராத
மண்ணில் சேர்ந்த
மலராய்
என்றும்
எங்கள் கண்களில்.......
அருள் நிலா வாசன்.
கோலம் போட
வாசல் கதவு
திறக்கவேயில்லை....
வேரில் பிடித்த
ஈரம் காய்ந்து
இடையில் தோய்ந்து
இன்னும்
நனைய
அடித்து ஊத்தியது
இருட்டில் வந்த
இடியும் மழையும்.
ஒரே நாளில்
கொழுத்தும்
சூரியனைக்
கொள்ளையடிக்க
அடித்துத் தோய்த்து
இறுக்கிப் பிழிந்த
அத்தனை துணியும்
பாரம் தோய்ந்த
கொடியில்
இன்னும்
ஆடிக் கொண்டே
இருக்கிறது......
வீட்டுச் சாவி
வீதியில் கிடக்க
விடுப்புப் பார்த்தவர்
வில்லங்கம் பிடிக்க
வீணாய் போனது
எல்லாம்....
மொட்டவிழ்ந்த மலரின்
வாசம்
மாலையில் சேராமல்
மலர்ந்தும்
மலராத
மண்ணில் சேர்ந்த
மலராய்
என்றும்
எங்கள் கண்களில்.......
அருள் நிலா வாசன்.
.jpg)
வணக்கம் வருக
ReplyDelete