Friday, 20 March 2015

எனக்கு மட்டும் தான்.....

வெட்டை வெளியில்
வேடிக்கை பார்க்க
வந்தது போல்
வேகமாய் இறங்கியது
வெளிக்கிட்டு
வந்த மழை.....

கட்டை விரலில்
கட்டுப் போட்டதை
மறந்துபோய்
கையிலிருந்த
குடையை
சுண்டி விரித்தேன்

என்ன கோவத்தில்
வந்ததோ தெரியவில்லை
என்னையும்
சேர்த்து
இழுத்துக்
கொண்டே போனது
கண்டவரையெல்லம்
தள்ளி
விழுத்திக்கொண்டு
வந்த காற்று....

இழுத்துப்
பறித்து
நான் வீடு
திரும்புமுன்......

வீட்டைப் பிரித்துக்
கொள்ளையடித்த
சூறாவளி
உன் சேட்டை
மட்டும்
கொடியில்
விட்டுச்சென்றதேனோ,,??

நாத்தம் தாங்காமல்.....

குடித்துக் குடித்தே
குட்டிச் சுவராகிப்
போன

என் புருஷன் தான்
அவர்
எனக்கு மட்டும்தான்....

அருள் நிலா வாசன்.
20.03.2015                                       .

No comments:

Post a Comment