Tuesday, 24 March 2015

நெஞ்சிருக்கும்வரை

பொத்திவைச்ச
ஆசைகளை
ஒவ்வொன்றாய்
பறக்கவிட்டு
மொத்தமாய்
என் கண்ணில்
ஒத்தி ஒத்தி
அழகு பார்த்தேன்..

ஒவ்வொன்றும்
கலர்கலராய்
ஊரெங்கும்
பறக்கையில
ஊரைவிட்டே
போகின்றேன்

ஊர் எல்லையில
போகயில
என்னைப்
பார்த்திருந்த
சாமிக்கிட்ட
உனக்காக
வேண்டிக்கிட்டேன்...

கண்ணுக்குள்ள
உன்னை வைச்சு
காலமெல்லாம்
உன்னை நினைச்ச
உன் நினைப்பை
மட்டும்
என்னோடு
கடைசிவரை
எடுத்துச் செல்ல
உன்
அனுமதியைத்
தருவாயா..?

நெஞ்சிருக்கும்வரை
என்னோடு
நெருக்கமாய்
இருக்கட்டும்...


அருள் நிலா வாசன்.
24.03.2015                                      

No comments:

Post a Comment