பொத்திவைச்ச
ஆசைகளை
ஒவ்வொன்றாய்
பறக்கவிட்டு
மொத்தமாய்
என் கண்ணில்
ஒத்தி ஒத்தி
அழகு பார்த்தேன்..
ஒவ்வொன்றும்
கலர்கலராய்
ஊரெங்கும்
பறக்கையில
ஊரைவிட்டே
போகின்றேன்
ஊர் எல்லையில
போகயில
என்னைப்
பார்த்திருந்த
சாமிக்கிட்ட
உனக்காக
வேண்டிக்கிட்டேன்...
கண்ணுக்குள்ள
உன்னை வைச்சு
காலமெல்லாம்
உன்னை நினைச்ச
உன் நினைப்பை
மட்டும்
என்னோடு
கடைசிவரை
எடுத்துச் செல்ல
உன்
அனுமதியைத்
தருவாயா..?
நெஞ்சிருக்கும்வரை
என்னோடு
நெருக்கமாய்
இருக்கட்டும்...
அருள் நிலா வாசன்.
24.03.2015
No comments:
Post a Comment