இருந்ததை எல்லாம்
எடுத்துக்
கொடுத்தேன்
என்னை
மட்டும்
ஒழித்து
வைத்தேன்....
அதற்கொரு காலம்
எனக்கென்று
அமையுமென
இருப்பதை எல்லாம்
வெறுத்தேன்
உன்னைத்
தவிர......
இடையில்
நடந்ததை எல்லாம்
மறந்தேன்
இனி
நமக்குள்
நடப்பதைக்
மட்டும் காண...
நடப்பதை எல்லாம்
மறைத்து
நீ
நடந்ததை
மட்டும் சொல்லு
உன் மரணத்தில்
நடந்தது
என்ன..?
வீதிக்கு வந்த
விதி
இப்போ
என்
கைபிடித்து
சொல்கிறது
கதையல்ல இது நிஜமென்று.....
அந்த ஒற்றை
விளக்கை
நீயே
அணைத்திருந்தால்.....
இனியாவது
உன்
முகமூடியை
நிரந்தரமாய்
எடுத்துவிடு
உன்
நினைவால்
வாழ்ந்த
நினைவோடு
வாழ்வேன்
நான்
மரணம்
என்னைத் தொடும்வரை......
அருள் நிலா வாசன்

No comments:
Post a Comment