எட்டிப் போன
சூரியன்
மீண்டும்
என் பக்கம்
ஏதோ ஒரு நாள்
எனக்காக வருமென்று
நகர்ந்த சில நாட்கள்.
போய்க்கொண்டேயிருந்த
உன்னை
நான்
பொய்யென்று
அறியாமல்
பகலிரவாய்த்
தேடியே கரைந்தது
தொடர்ந்த சில நாட்கள்..
உள்ளேயும் வெளியேயும்
உத்து உத்துப்
பார்க்கின்ற
சின்னக் குருவிபோல்
உன்னை
நான் ஒரு நாளும்
அப்படிப்
பார்த்ததேயில்லை...
உள் மனது
சொன்னதெல்லாம்
உண்மையென்று
நம்பிக்கொண்டே
இருந்தது
என் தப்புத்தான்....
எனக்காக ஒரு பொழுதில்
உன் கண்ணில்
சில பூக்கள்
ஒவ்வொன்றாய்ப்
பூக்கக்கூடும்....
அப்போது நான்
உனதாகி
இல்லாமல்
யாருக்கும்
சொல்லாமல்
என் மூச்சு மட்டும்
உன்னையும்
விட்டு
ஊர்வலமாய்
வெளி வந்தபோது......
உன் மனம் மட்டும்
தனியாகப் பேசும்.....
அருள் நிலா வாசன் .

No comments:
Post a Comment