மறந்து
நம் வீட்டில்
விட்டுச் சென்ற
உன் கால்
தடங்கள் மேல்
நான் கால்
வைத்தபோது
என்னிடம் ஒரு
கேள்வி கேட்கிறது
என் வீட்டுச்
சுவரில்
நீ வரைந்த
ஓவியங்கள்
நிலை மறந்த
என் கண்ணில்
சிலையாகி நிற்கிறது
மனசுக்குள்
அழவிட்டுக்
கன்னத்தில்
வழிகின்ற
வென்னீரில்
நனைந்திட்ட
மாரெங்கும்
புண்ணாகி
மறுபடியும்
என்னுள்ளம்
மௌனத்தில் தவழ்கிறது
நீ இருக்கின்ற
ஒரு பொழுது
இல்லாத
பல பொழுது
இனியும்
என் வழியில்
குறுக்கிடுமா..?
துடிக்கின்ற
இதயத்தை
துணிபோட்டு
மூடி
நிரந்தரமாய்க்
குளிராமல்
சூடாக்கி
வைத்திருக்கின்றேன்
அதை
உன்னிடத்தில்
ஒரு நாள்
உயிரோடு ஒப்படைக்க.....
அருள் நிலா வாசன் .

No comments:
Post a Comment