Friday, 30 October 2015

மண் இருக்கும்வரை

உட்கார்ந்த இடத்திலிருந்தே
சிந்தனைச் சிதறல்களை
உலகமெங்கும்
அள்ளித் தெழித்து
மொழி தெரியாத
மோடனுக்கும்
வழியைத் தெளிவாக்கும்
மெட்டுக்குப் பாட்டை
வரி வரியாய் பொழிந்து
வரலாறு படைத்த
வள்ளலே


பொங்கு தமிழில்
சங்கு முழங்க
நெஞ்சின் ஈரத்தை
வீரமாய்
நெகிழ வைத்து
எழுத்தில் வடித்த
முள்ளு வேலியின்
வரலாற்று
வலியுணரந்த
வாலியே

மீண்டும் மீண்டும்
கரை தொடும்
அலைபோல
காதுச் சுவர்களை
மீட்டிச் செல்லும்
ஒவ்வொரு
பாடல் வரிகளும்
காலத்துக்கும்
அழியாத கோலங்களாய்
மண் இருக்கும்வரை
பதிந்திருக்கும்.......
30.10.2015                               

No comments:

Post a Comment