ஏமாற்றம் எப்போதும்
என் வழியில்
தொடர
நீமட்டும் என்றும்
உன் வழியில்
இடர
மாற்றம்
ஒன்று
தேடிவர
மறுபடியும்
மாரி ஆத்தாவை
நான்
மனசார
வேண்டிக்கொண்டேன்..
உனக்கும்
எனக்கும்
என்று
எப்பவுமே
ஊர் எல்லையில
காத்திருந்த
எதையும்
எதிர்பார்க்காத
அந்த மரம்
புயலுக்குப் பின்னும்
இப்பவும்
உன்னையும்
என்னையும்
தேடித்
தனி மரமாய்
நிற்கிறது......
ஊரைவிட்டுப்
போன நீ
இயலாமை
என்றுசொல்லி
முயலாதிருந்து
உன்னையே
நீஅழித்திடாதே.....
நீ குடியிருக்கக்
காத்திருந்த
கோயில் வாசல்
என்றும்
உனக்காகத்
திறந்திருக்கும்......
ஊரென்ன
சொன்னாலும்
உனக்கென்ன
வந்தாலும்
உன்னை நான்
ஏற்றுக் கொள்வேன்......
ஒரு பொழுது
சாய்ந்தாலும்
மறு பொழுது
சாத்தியமாய்
நமக்காக விடியும்
அதுவரை
நான் காத்திருப்பேன்
.

No comments:
Post a Comment