Friday, 9 October 2015

உன்னைத் திரும்பவும்

தலை எழுத்தை
மாற்றி எழுத
தண்ணீரில் கதை
எழுதி
அச்சுக்குக்
கொடுத்தது போல்
பத்திரத்தில்
அழுத்தி வைத்த
அவசரக்
கையெழுத்தில்
விவாகமும் ரத்தாகி
பிரிந்தே போனோம்


வெகுதூர இடைவெளியில்
வருடங்கள் நாலு
வரிசையாய்
கடந்தாலும்
இன்னொரு
திருமணத்தில்

உருமாறிப்போன
உன்னைத் திரும்பவும்
பார்க்க
நேர்ந்த போது
மன அழுத்தத்தில்
இருந்த எனக்கு
என் தலையே
பிளந்தது போல்
இருந்தது
மீண்டும்
சேர மாட்டோமா என்று...
,
,

அருள் நிலா வாசன்
09.10.2015                       

No comments:

Post a Comment