தலை எழுத்தை
மாற்றி எழுத
தண்ணீரில் கதை
எழுதி
அச்சுக்குக்
கொடுத்தது போல்
பத்திரத்தில்
அழுத்தி வைத்த
அவசரக்
கையெழுத்தில்
விவாகமும் ரத்தாகி
பிரிந்தே போனோம்
வெகுதூர இடைவெளியில்
வருடங்கள் நாலு
வரிசையாய்
கடந்தாலும்
இன்னொரு
திருமணத்தில்
உருமாறிப்போன
உன்னைத் திரும்பவும்
பார்க்க
நேர்ந்த போது
மன அழுத்தத்தில்
இருந்த எனக்கு
என் தலையே
பிளந்தது போல்
இருந்தது
மீண்டும்
சேர மாட்டோமா என்று...
,
,

No comments:
Post a Comment