அள்ளி எறியும்
வெய்யிலுக்குள்
அடங்காமல்
என் நெஞ்சில்
துள்ளி விரிகிறது
ஆயிரம் நினைவலைகள்..
வெள்ளிக் கொலுசுமணி
வெறுங்கழுத்துக்குப்
பாசிமணி..... நீ
கொண்டுவந்து
என்னருகில்
காற்றுக்கும் இடமின்றி
பள்ளிகொண்ட
நேரமெல்லாம்
ஊற்றெடுக்கும்
உன் பருவராகம்.....
வயல்காட்டு வரப்பெங்கும்
உன் நிழலைத்
தேடிய நான்
அப்பருக்குப் பசியென்று
அருகிருந்து பரிமாற
ஒருபிடி சோற்றிற்குள்
ஒளிந்திருந்தே
என்னை
உருட்டி எடுக்கின்றாய்...
உன் நினைப்பெல்லாம்
அடிநெஞ்சில்
ஒவ்வொன்றாய்
ஊடுருவி
மூச்சாய் முட்டுதே
என்
முந்தாணையில்
முடிச்சாகி......
நீமட்டும் இப்போது
என்னருகில்
இருந்திருந்தால்
கருக்கொள்ளும்
மேகங்கள்
எம்மிடத்தல் தோற்றிருக்கும்
. .

No comments:
Post a Comment