Saturday, 4 July 2015

வார்த்தைகளே தேவையின்றி

ஈரப் பெருவெளியில்
குறுகிய நேர
இடைவெளிக்குள்

ஏற்றத் தாழ்வுகளோடு
வெகுதூரம்
பறந்தாலும்
சின்னச் சிறகில் 
வைத்த
பெரிய
நம்பிக்கையில்

சுயமாய் தேடும்
வாழ்க்கையைச்
சுதந்திரமாய் வாழும்
பறவைகள் 
கொட்டிக் கிடக்கும்
இயற்கையைத்
தட்டிப்பறிக்காமல்
பேச்சு வழக்கு
இன்றி
பேரழகாய்
வாழுது

உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ளும்
வார்த்தைகளே
தேவையின்றி
ஒலிமட்டும்தான்
அதன் 
மொழியென்பதால்....

அருள் நிலா வாசன்
05.07.2015                                  .


No comments:

Post a Comment