பிரித்துப் பார்க்கையில
சிரிப்புத்தான் வந்தது
பிரியா வரம்கேட்டுப்
பிரியமுடன் நீ
இன்று.....
யாருமில்லா நேரம்
ஊருக்குள்ள வந்திறங்க
எங்கிருந்து வந்தது
இன்று
இந்த வீரம்
வேர்விட்ட நம்உறவு
வெறும்
கதையாகிப்
போகுமென்று
ஊர் பெயர்
சொல்லாத
சாத்திரியும்
சொல்லவில்லை....
மேஸ்திரியைக் கட்டி
நானும் கல்லரிந்து
கணக்குப் பார்த்து
மேலும் கீழும்
வீடுகட்ட
மெல்ல நடை
போட்டுக்கொண்டு
காலம்தான் நீழும்
என்று
கணக்கர் வந்து
சொன்னபோதும்
காதில் நான்
விழுத்தவில்லை....
சொல்லாமல்
ஊரைவிட்டே
சுயநலமாய்
போனதுதான்
நீ செய்த
மாகுற்றம்
இனியென்ன
வரக்கூடும்
என் பெயரில்
மாற்றம்.....
முற்றுப் புள்ளி
வைக்க
முன்னர்
முடிவாக
நீயெழுதிய
மூன்றே வரிகள்
முழுசாகப் படிக்கு
முன்னர்
நனைந்தே கிழிந்தது
கண்ணீரில் கடிதம்...
கண்டபடி எழுதாதே
வார்த்தைகள் கவனம்
தலையெழுத்து
மாறியதை
இன்று
என் கையெழுத்து
சொல்லும்
இனியென்னை
தினமும்
உன் நினைவே
கொல்லும்.....
அருள் நிலா வாசன்

No comments:
Post a Comment