விட்டெறிந்த தேங்காய்கள்
லாச்சப்பல்
வீதியெங்கும்
சப்பளிந்து கிடக்கிறது
லாச்சப்பல்
வீதியெங்கும்
சப்பளிந்து கிடக்கிறது
ஏழைக் குடும்பங்கள்
எத்தனையோதொட்டுத் தின்ன
வீட்டில்
சட்டினிக்கும்
வழியின்றிப்
பட்டினியில்
வாழ்க்கை
வெறுந்தரையில்
வெறுக்கிறது
எத்தனையோதொட்டுத் தின்ன
வீட்டில்
சட்டினிக்கும்
வழியின்றிப்
பட்டினியில்
வாழ்க்கை
வெறுந்தரையில்
வெறுக்கிறது
மண்ணுக்காய்
உழைத்தவர்கள்
மழைக்கொதுங்க
மனையின்றி
மாற்று
வழியுமின்றிக்
காற்றையள்ளித்
தின்றுவிட்டு
கடக்கின்ற
நிகழ்காலம்
சிதறிக் கிடக்கிறது
பிள்ளையாருக்கு
பக்தியென்று
போட்டுடைத்த
தேங்காய் போல்....
உழைத்தவர்கள்
மழைக்கொதுங்க
மனையின்றி
மாற்று
வழியுமின்றிக்
காற்றையள்ளித்
தின்றுவிட்டு
கடக்கின்ற
நிகழ்காலம்
சிதறிக் கிடக்கிறது
பிள்ளையாருக்கு
பக்தியென்று
போட்டுடைத்த
தேங்காய் போல்....
ஏழைகளை
எட்டி நின்று
ஏழனமாய்க்
குட்டுகின்ற
நிலையற்ற
எதிர்காலம்
எட்டி நின்று
ஏழனமாய்க்
குட்டுகின்ற
நிலையற்ற
எதிர்காலம்
ஏக்கத்தில்
மிதக்கிறது
கடைசியில்
என்னவென்று.....
மிதக்கிறது
கடைசியில்
என்னவென்று.....
அருள் நிலா வாசன்
1.09.2015
1.09.2015

No comments:
Post a Comment