Monday, 14 September 2015

ஆணியிலே தொங்கவிடு

வேண்டாமென்று
நீ தூக்கியெறிய
நானுந்தன் வீட்டு
விளக்குமாறு அல்ல

நீதான்
முதன் முதலில்
உன்
வர்ணங்கள் பூசிய
உன் முதல்
எழுத்துப் பலகை...

அப்போது
உன் கண்ணுக்கு
பளிச்சென்று
தெரிந்த
என்னை
இப்போதே

ஆணியிலே
தொங்கவிடு
எல்லோரும்
அழித்து அழித்து
எழுதிவிட்டுப்
போகட்டும்
என்
விதியின் வரிகளை.......

அருள் நிலா வாசன்.
14.09.2015                                      .


No comments:

Post a Comment