Tuesday, 18 August 2015

அன்றொரு நாள் என்னோடு

உத்தரவாதம் இல்லாமல்
நீ கொடுத்த
நம்பிக்கையை
கழுதத்தில்
தொங்கவிட்டு
ஊரூராய்
அலைந்தேன் நான்.
 பிடிவாதம் உன்னை
இழுத்துப் பிடித்து
வைத்த பின்னும்
அடி தாங்க முடியாமல்
ஒரு படியேறி
உன் வழிக்கு வந்து
தொலைந்தேன் நான்.

சாகாவரம் கேட்ட
உருவமில்லாக் காதலுக்கு
உயிர் கொடுத்தவன்
நீ எங்கிருந்த போதும்
உருகிவிட்ட
என் உள்ளம்
உருவிழந்து போகும்
முன்னர்
திரும்பி வருவாய் என....

கரைதொட்டுத் திரும்பும்
அலையே
உன் நுரைபட்டு அரும்பும்
அழகான நீர் துளிகள்
என் கால்தொட்டு
உடைந்த போது
உணருகின்றேன்...

அன்றொரு நாள் என்னோடு
இங்கிருந்த
உன்
இருபாதச் சுவடுகள்
இன்னும்
உயிரோடுதானென்று.....

18.08.2015                     

No comments:

Post a Comment