Thursday, 6 August 2015

உன்னை மட்டும் நீ நம்பு

எழுந்து நடந்த
காற்றைக் கேட்டேன்
எங்கே போகிறாய்
என்று
சொல்லத்தான்
நினைக்கிறேன்
என்றது.....

மலர்ந்து சிரித்த
பூவினைக் கேட்டேன்
எதற்கு சிரித்தாய்
என்று
காற்றுக்கென்ன 
வேலியென்று
பூவும் காற்றும்
சேர்ந்தே
அங்கும் இங்கும்
அசைந்தது....

மூடிக்கொண்டிருந்த
மேகத்தைக் கேட்டேன்
எதற்கு
இழுத்து மூடுகிறாய்
என்று
அது பூமிக்கும்
எனக்குமிடையில்
இரகசிய ஒப்பந்தம்
என்று
சொல்லிக்கொண்டிருக்க
இடையில்
குறுக்கிட்ட
இடியும் மின்னலும்
போட்ட சண்டையில்
ஈரமாகியது
நிலம்.....

சலனமின்றி
சாத்தியமாய்
அங்கும் இங்கும்
பறந்த
பட்டாம் பூச்சியைக்
கேட்டேன்
எப்படி உன்னால்மட்டும் 
இப்படி முடிகிறது
என்று
அமைதிக்கு பெயர்தான்
சாந்தி என்றது...

சித்திரமாய்
சீமெந்தில்
சோக்காய்
சொப்பனத்தில்
தனியாக
தவழ்ந்த
என் கால்களைத்
தவணை முறையில்
பார்த்தேன்..

உன்னை மட்டும்
நீ நம்பு
நான் உன்னோடு
வருவேனென்று
உறுதியாய்
சொன்னது

அருள் நிலா வாசன்
6.08.2015                          .


No comments:

Post a Comment