Sunday, 23 August 2015

இழுத்துப் பூட்டிய ஆமைப் பூட்டு...

எல்லையில
கல்லுமதில்
எடுத்தெறிஞ்சு
சொல்லும் பதில்
ஏறிக் குதித்து
வந்தாலும்
அதிரடியாய் 
இங்கு
அதி உயர்
பாதுகாப்பு..

 கோடை வெய்யில்
வாடைக்காற்று
கொட்டுமழையில்
வெட்டும் கீற்று
கிட்ட வந்து
தாக்காமல்
தப்பிப் பிழைத்துக்
தரமாய் பழுக்க
தனியாய் தொங்கும்
பலாக்காய்..

முள்ளு விரிந்து
முழுசாய் கனிந்து
பலமாய் வாசம்
மூக்கு நுனியில்
முட்டுமுன்னர்
முற்பாதுகாப்பென்று
கொழுந்து விட்ட
அறிவில் நனைந்து
இழுத்துப் பூட்டிய
ஆமைப் பூட்டு...

இரும்புத் தூணுக்குத்
துணையாய்
இறுதிவரைக்கும்
பூட்டும் திறப்பும்
கூட்டுச் சேர்ந்து
பலமாய்
இருக்கும்

ஆனால்..

பலா...பழக்
காப்புறுதியில்
எத்தனை நாளுக்கு
என்னதான்
உத்தரவாதம்..?
                                   

No comments:

Post a Comment