Sunday, 26 April 2015

தலையணை மட்டும்.......

தனக்கு மீறியது
தரணியில்
இல்லையென்று
தனக்குத்தானே
தனிப்பாட்டு
பாடும்.....

நேரியவாழ்வில்
நேசமிழந்து
நித்தியமான
தேடல் மறந்து
சத்தியம்
தொலைத்த
நேரம்.....

தன்னைத்
தாங்கிப்
பிடிக்க
தன்னில்
வலுவின்றிப்
போகும்
தணியாத தாகத்தில்
தங்கும்
மணித்துளியில்
தலையணை
மட்டும்
துணைப்பாட்டுப்
பாடும்....

இழுத்துவிடும்
மூச்சு
இரட்டிபாகி
இன்னல்ப்பட்டு
இருளும் ஒளியும்
கலங்கும்
தருணம்
தானாய்
இறங்கும்
தலைக் கனம்.....

அருள் நிலா வாசன்
                                               

No comments:

Post a Comment