Friday, 10 April 2015

உண்மையாய் இருந்தால் உயிரோடு வந்துவிடு...

நீ எட்டிப் போனது
தெரியாமலே 
நான் கிட்ட 
வரும்போதெல்லாம்
எட்டிப் பார்க்கும்
என் நினைப்பு
உனக்குள்
ஏதோ ஒரு
உணர்வை
ஏற்படுத்துகிறது....

உன்னைப் புரிந்தும்
புரியாமல்
இருந்த
எனக்கு
இப்போது
புரிந்துவிட்டது...

என்னையும் உன்னையும்
பிரிக்க
எவராலும்முடியாது
உனக்குள்
இருக்கும்
அன்பு மட்டும்
உண்மையாய் இருந்தால்......

உயிரோடு வந்துவிடு
என் நினைவுகள்
உனக்குள் இருக்கும்வரை
என் கனவுகள்
உனக்காக வாழும்....

உனக்குள் இருக்கும்
என் இதயத்தை
ஒரு தடவை
உனக்காகத்
தொட்டுப் பார்
அது
எனக்காகத்தான்
இன்னும்
துடிக்கிறதா என்று......

உன்னையும்
என்னையும்
ஒன்றாகிப் பார்த்த
அந்த
முழு நிலவுமட்டும்
இப்பவும்அப்படியே
இருக்கிறது
ஒட்டியிருக்கும்
வானை
விட்டுப் போக
விருப்பமின்றி.....

அருள் நிலா வாசன்       

No comments:

Post a Comment