Thursday, 9 April 2015

இது கனவாய் இருக்கக்கூடாதா...?

நீவிட்டுச் சென்ற
பாதச் சுவடுகளை
நான்
தொட்டுத் தொட்டுப்
பார்க்கிறேன்

எட்டிப் பார்க்கும்
உன் நினைவுகளை
கட்டிப் பிடிக்க
நினைத்தாலும்
கைகளைத்
தட்டிவிடுகிறது
இடையில்
நுழைந்த 
உன் சின்னக் கோவம்

இரவுகள் பகலாய்
நீண்டதனால்
இடைவெளி
தாங்காப்
பொழுதுகளில்
இழுத்துவிட்ட
மூச்சிற்குள்
ஒட்டிக் 
கொண்டிருக்கிறது
விட்டுக் 
கொடுத்திருக்கலாமோ
என்ற
கேள்வியும் பதிலும்.... 

இது கனவாய்
இருக்கக்கூடாதா...?

இதயம் தொட்டு
எதையும் பகிர
எனக்குள் நீ
உனக்குள் நான்.

பிரிவொன்றை சந்திக்காமல்....

அருள் நிலா வாசன்          

No comments:

Post a Comment