Wednesday, 27 July 2016

நீண்டுபோன இரவுகளின்
நிசப்த அறைகளில்
என் தனிமைக்குத்
துணையாய்
எண்ணத்தின்
கதகதப்பில்
இருட்டின்
இறுக்கத்தில்
எதுவும்
சொல்லாமல்
வந்து
என்னில் உரசி
யன்னல்
சேலையில்
உன்னி
ஊஞ்சலாடும்
சில்லென்ற
காற்றுக்குத்
தெரியவாபோகிறது
நிம்மதியற்ற
என்
இதயத்தின்
ஒவ்வொரு
துடிப்பிலும்
நீங்காமல்
இருப்பது
உன் நினைவுகள்
மட்டும்தானென்று...
.
.
அருள் நிலா வாசன்.

No comments:

Post a Comment