உறுதியாய்
நீ சொன்னதெல்லாம்
தலையில் அடிபட்டும்
என்
நினைவில் இருந்தது
ஆனால் நீ எதற்காக
என்னைப் பிரிந்தாய்
அதுமட்டும் இறுதிவரை
எனக்குப் புரியாமல் இருந்தது
இடுப்பிலொரு குழந்தை
இறுகக் கைபிடித்துத்
தரையில் நிற்கும்
இன்னொரு குழந்தை
இன்றெனது வழிப்பயணத்தில்
எதிர் பாராத சந்திப்பு
இனியென்ன பேசுவது
எனக்கென்று
இனியொன்றுமில்லை
இதுவரை நான்
வாழ்ந்ததே உனக்காகத்தானே
தேடினேன் உன்னை
நான் தெளிந்த பின்னர்
உன்னை எங்கெல்லாம்
தேடினேன்
இன்று உன்
வாடிய முகத்தில்
உன் வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு வரிகளும்
எழுதிக் கிடக்கிறது
என் வாழ்க்கைப் பயணத்தின்
இறுதி ஊர்வலத்திலாவது
மௌனத்தின் போர்வையில்
பாதை ஓரத்தில்
உன்னைப்
பார்த்ததில்
மகிழ்ச்சி
இன்னொரு ஜென்மமிருந்தால்
மறுபடியும் சந்திப்போம்.
.
அருள் நிலா வாசன்
10.09.2017
இறுகக் கைபிடித்துத்
தரையில் நிற்கும்
இன்னொரு குழந்தை
இன்றெனது வழிப்பயணத்தில்
எதிர் பாராத சந்திப்பு
இனியென்ன பேசுவது
எனக்கென்று
இனியொன்றுமில்லை
இதுவரை நான்
வாழ்ந்ததே உனக்காகத்தானே
தேடினேன் உன்னை
நான் தெளிந்த பின்னர்
உன்னை எங்கெல்லாம்
தேடினேன்
இன்று உன்
வாடிய முகத்தில்
உன் வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு வரிகளும்
எழுதிக் கிடக்கிறது
என் வாழ்க்கைப் பயணத்தின்
இறுதி ஊர்வலத்திலாவது
மௌனத்தின் போர்வையில்
பாதை ஓரத்தில்
உன்னைப்
பார்த்ததில்
மகிழ்ச்சி
இன்னொரு ஜென்மமிருந்தால்
மறுபடியும் சந்திப்போம்.
.
அருள் நிலா வாசன்
10.09.2017
No comments:
Post a Comment